இந்தியா, ஜூன் 15 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு சில நேரங்களில் பயணத்தின் பொழுது ஒரு கிரகங்கள் மற்றொரு கிரகங்களோடு இணைக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.

நவகிரகங்களில் சக்தி வாய்ந்த கிரகமாக விளங்கக்கூடியவர் சனி பகவான். அதேபோல நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர்களின் சேர்க்கை இந்த மே மாதம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் சனிபகவான் மீன ராசியிலும் சூரியன் ரிஷப ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர்.

சனிபகவான், சூரியன் இருவரும் கடந்த மே மாதம் 20ஆம் தேதி அன்று 90 டிகிரி அம்சத்தில் அமர்ந்தனர். அதனால் திரிய...