இந்தியா, மே 26 -- ஜோதிடத்தில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது ஆன்மீக ரீதியாக மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது, குறிப்பாக திருமணம், குடும்ப நலன், மற்றும் முன்னோர்கள் வழிபாடு தொடர்பான விசேஷ தினமாக திகழ்கிறது. இந்த நாட்களின் விளைவுகள் பன்னிரண்டு ராசிகளின் மீது வலுவாக உள்ளன. இந்த மாதம் மே 26 (இன்று) சோமாவதி அமாவாசை கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி போன்ற காரியங்களை செய்தால், அவர்கள் ஆசி அதிகம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருமணமான பெண்கள், துணை வாழ்நாள் நீடிக்க, குடும்ப நலனுக்காக விரதம் இருந்து வழிபடுவார்கள். பாவ பரிகாரம், கர்ம நிவாரணம் மற்றும் மன அமைதி பெற இது ஒரு சக்தி வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் சிவ லிங்கத்திற்கு பசும் பால்...