இந்தியா, மே 24 -- நடனக் கலைஞர் பஞ்சமி நாயகி மற்றும் மணிகண்டன் தம்பதியரின் மூன்று மகன்கள் காதணி விழாவிற்கு மாமனாக இருந்து சீர்வரிசை செய்த நடிகர் சூரியின் செயல்பாடு பலரையும் ஈர்த்து இருக்கிறது.

அண்மையில் ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில், தன் மகன்களுக்கு இன்னும் மொட்டையடித்து காது குத்தவில்லை என டான்ஸர் பஞ்சமி நாயகி தனது ஆதங்கத்தை சொன்னதைத் தொடர்ந்து, தான் உங்கள் பிள்ளைகளுக்கு மாமனாக இருந்து, காதணி விழாவை நடத்திவைக்கிறேன் என சூரி சொல்லியிருந்தார்.

அந்த வாக்கைக் காப்பாற்றும் விதமாக, டான்ஸர் பஞ்சமி நாயகியின் மூன்று குழந்தைகளுக்கு மாமனாக இருந்து, காது குத்தும் நிகழ்ச்சியை சிறப்பித்தார், நடிகர் சூரி. மேலும் சீர்வரிசையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, ''மாமன் திரைப்படம் வெ...