இந்தியா, மே 2 -- பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரி நேற்றிரவு (மே 1) கரூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் விலைக்கேற்ப சேர்கள் போடப்பட்டு இருந்தன. இதற்கிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிளாட்டினம் டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்தவர்களுக்கு அங்கு முறையாக சேர் ஏற்பாடு செய்யப்படாததால் பலர் நின்று கொண்டே கச்சேரியை பார்த்தார்கள்.

மேலும் படிக்க | 'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்

இதில் அதிருப்தி அடைந்த டிக்கெட் பெற்றவர்களில் சிலர் கச்சேரியை பார்க்காமலும், இன்னும் சிலர் 3 மணி நேரம் நின்று கொண்டும், இன்னும் சிலர் பாதியில் கச்சேரியை விட்டு வெளியேறியும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் இந்த ஏமாற்றம் குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியவற்றை பார...