இந்தியா, மே 23 -- இந்து மதத்தை பொறுத்தவரை ஏகாதசி விரதங்கள் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு மொத்தம் 24 ஏகாதசி விரதங்கள் வரும். எத்தனை விரதங்கள் இருந்தாலும் அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது என்பார்கள். அந்தவகையில் வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசிக்கு 'அபரா ஏகாதசி' என்று பெயர். அபரா என்றால் அளவில்லாத என்று பொருள். அளவில்லாத நலன்களை தரக்கூடியது இந்த ஏகாதசி ஆகும். அளவில்லாத நன்மைகளையும், செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கக் கூடிய நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த ஆண்டு அபரா ஏகாதசி இன்று (மே 23) வெள்ளிக்கிழமை வருகிறது. இன்றைய தினம் சில மங்களகரமான பொருட்களை தானம் செய்தால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.

அபரா ஏகாதசி பெருமாளை வழிபடுவதற்கும் அவரது ஆசியைப் பெறுவதற்கும் ஒரு சிறப்பு நாளாகக் கருதப்...