இந்தியா, ஜூன் 13 -- சென்னையில் மெட்ரோ கட்டுமான விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்றிரவு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது போரூர் அருகே, கிண்டியில் இருந்து போரூர் செல்லும் பாதையில், மெட்ரோ பணிக்காக ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த 15 மீட்டர் உயர கான்கிரீட் சட்டம் சரிந்து விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்த கோர விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவம் L&T நிறுவனத்தின் முக்கிய அலுவலக வாசலில் நடைபெற்றது.

விபத்தில் சுமார் 30 டன் எடை கொண்ட கான்கிரீட் சட்டம், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் விழுந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். பொக்லைன் இயந்திரங்கள் மற...