இந்தியா, ஜூன் 5 -- சென்னை ஐஐடியில் இடம் கிடைத்து உள்ள கல்வராயன்மலையை சேர்ந்த பழங்குடி இன மாணவியின் கல்வி செலவினை அதிமுகவே ஏற்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி, 12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், #JEE தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, ஐஐடி மெட்ராசில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.

மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.

கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்விய...