இந்தியா, மே 3 -- சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகத் தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.

சென்னையில் இருந்து சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீவிர சோதனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து கொழும்பு சென்ற விமானமானது, கொழும்பு பண்டரநாயக சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. பஹல்ஹாம் தாக்குதல் தீவிரவாதிகள் இந்த விமானத்தில் பயணம் செய்திருக்கலாம் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பிரத்யேக சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பஹல்ஹாம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் ஆறுபேர் இலங்கை செல்லும் விமானத்தில் பயணம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அண்மையில் ஏப்ரல் 22ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்ஹாமில் தீவிரவாத...