இந்தியா, மே 17 -- தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த வைப்பாறு பாசன விவசாயிகள் பங்கேற்ற செண்பகவல்லி தடுப்பணை வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது. "செண்பகவல்லி தடுப்பணை எங்கள் உரிமை" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தடுப்பணையைச் சீரமைத்து உரிமையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் முக்கிய நிகழ்வாக, ஜூலை 10 ஆம் தேதி தென்மலை கிராமத்தில் பத்தாயிரம் விவசாயிகள் பங்கேற்கும் செண்பகவல்லி மீட்பு எழுச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (மே 17, 2025) அன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிவகிரி ரத்தின வேலு தலைமை வகித்தார். தென்மலை பாபு ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத...