இந்தியா, மார்ச் 31 -- ஜோதிடத்தின் படி, நவக்கிரகங்கள் தங்கள் நிலைகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் வரவிருக்கும் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. கிரகங்களின் தளபதியான செவ்வாய் மற்றும் கிரகங்களின் ராஜாவான சூரியன் ஆகியோர் தங்கள் ராசியை மாற்றப்போகிறார்கள்.

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போது கிரக மாற்றம் நடைபெறுகிறது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிடம் கூறுகிறது.

சூரிய பகவான் வரும் ஏப்ரல் மாதத்தில் 14ஆம் தேதி மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அதேபோல், செவ்வாய் பெயர்ச்சி வரும் ஏப்ரல் மாதம், 3ஆம் தேதி கடகராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

எனவே, வரவிருக்கும் ஏப்...