இந்தியா, மே 23 -- இதுகுறித்து சுற்றுச்சூழல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது;

சென்னை போன்ற பெருநகரங்களில் பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்காத வளர்ச்சி என்பது சாத்தியமா? என்பது முக்கிய கேள்வி. ஆனால் அதற்கான பதில் சாத்தியம் என்றாலும், அது நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

மனிதர்களின் இயற்கை விரோத செயல்பாடுகள் (உதாரணமாக காடழிப்பு, வாழ்விடங்கள் அழிப்பைக் கூறலாம்) காரணமாக, உலகில் 25 சதவீத ஜீவராசிகள் முற்றிலுமான அழிவை நோக்கி பயணித்து வருகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்களில் பல்லுயிர் பெருக்கத்தை காப்பது என்பது, அதன் பயன்களை மக்கள் மற்றும் அரசு உணர்ந்தாவது, அதை செய்ய முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படவேண்டும்.

* மரங்கள் நமக்கு உணவு, நார்ச்சத்து, நீர் இருப்பை உறுதிசெய்தல் போன்றவற்றை கொடுக்கிறது.

* நகர்ப்புற ...