இந்தியா, மே 10 -- நவகிரங்கள் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

இவர் நவகிரகங்களின் தலைவனாக கருதப்பட்டு வருகிறார். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் வருகின்றமே 15ஆம் தேதி அன்று சூரியன் ரிஷப ராசிக்கு செய்கின்றார். அப்போது தமிழ் மாதமான வைகாசி மாதம் பிறக்கப் போகின்றது. ஜூன் 15ஆம் தேதி வரை சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்வார் அதன் பின்னர் மி...