இந்தியா, மே 15 -- திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகாததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண குமார், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தனது குடும்பம் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டி, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றம் எண் 4-ல் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 7 அன்று சீமான் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அன்று ஆஜராகாததால் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 8 அன்று சீமான் ஆஜராகி விளக்கம் அளித்தார். இருப்பினும், அடுத்தடுத்த விசாரணைகளுக்கும் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், இன்றைய...