இந்தியா, மே 21 -- சமூகத்தில் சாதி எனும் வழக்கம் தொடங்கியதில் இருந்து குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டும் இன்று வரை பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த பாகுபாடு பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் கோயில் போன்ற பொது இடங்கள் என ஏறத்தாழ அனைத்து இடத்திலும் தொடர்கிறது. இதனை ஒழிக்கவே அரசு சார்பில் பல சட்டங்கள் இயற்றபடுகின்றன. எளியவர்களுக்காக பல நீதிப் போராட்டங்களும் நடந்த வண்ணம் இருந்து வருகிறது. பல நூறு ஆண்டுகள் ஆனாலும் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு மூலையில் சாதி எனும் இந்த அழுக்கு ஒட்டிக் கொண்டு போகாமல் இருக்கிறது. இந்த சாதி குற்றம் செய்து சிறைக்கு சென்றவர்களையும் விட்டு வைக்க வில்லை.

இந்தியாவில் உள்ள பல சிறைகளில் கைதிகளிடையே சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதிலும் சமையல் வேலையை உயர் சாதி எனக் ...