இந்தியா, மே 12 -- சித்ரா பௌர்ணமி என்பது தமிழ் கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு நாளாக கருதப்படுகிறது. சித்ரா என்ற சொல்லுக்கு சித்தம் என்று பொருள், இது நமது மனதை குறிக்கிறது. மனதின் காரகணான சந்திரனுக்கு இந்த நாள் மிக உகந்த நாளாக இருக்கிறது. சில ராசிகள் இந்த நாளில் அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்புகளை அனுபவிப்பதாக கருதப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி நாளில் மேஷ ராசியினருக்கு உற்சாகம் மற்றும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். இந்த நாள் புதிய தொடக்கங்களையும், புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள சிறந்த நேரமாக இருக்கும். தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் இன்றே உகந்தது நாள்.

ரிஷப ராசியினர் இந்த நாளில் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்பை பெறுவார்கள். இந்த நாள் அமைதி கிடைக்கும், நிதி மற்றும் உறவுகளில் வளர்ச்சி கா...