இந்தியா, மே 27 -- பேட்மிண்டன் விளையாட்டில் மிகவும் பாரம்பரியம் மிக்க தொடராக சிங்கப்பூர் ஓபன் போட்டிகள் இருந்து வருகிறது. இந்த தொடர் மே 27 முதல் ஜூன் 1 வரை சிங்கப்பூரிலுள்ள கல்லாங் பகுதியில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் எச். எஸ். பிரணாய், பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பி.வி. சிந்து ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சமீபத்திய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தவறியதுடன், மோசமான பார்மில் இருந்து வரும் பி.வி. சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் கனடா வீராங்கனை வென் யு ஜாங் என்பவரை எதிர்கொண்டார். 31 நிமிடங்களே நீடித்த இந்த போட்டியில் 21-14, 21-9 என்ற நேர் செட்களில் கனடா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார் பி.வி. சிந்து. தொடக்க நாளில் வெற்றியுடன் இரண்டாவது சுற்ற...