இந்தியா, ஏப்ரல் 17 -- Garbarakshambigai: உலகம் முழுவதும் கோயில் கொண்டு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டது வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.

குறிப்பாக நமது தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக எந்த அளவுக்கு மன்னர்கள் போரிட்டு வந்தார்களோ அந்த அளவிற்கு சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வானுயர்ந்த கம்பீரமாக கா...