இந்தியா, ஏப்ரல் 30 -- நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கனவே மாண்புமிகு அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதி...