இந்தியா, மார்ச் 19 -- ஆச்சார்ய சாணக்கியர் ஒரு சிறந்த தத்துவஞானி. அறவியல் நூலாசிரியரான சாணக்கியர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரபலமானவர். தனது கருத்துக்கள் மூலம், சாமானிய மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியுள்ளார். சாணக்கியரின் கொள்கைகளை வாழ்வில் சரியாகப் பின்பற்றினால், கஷ்டங்கள் தொலைந்துவிடும் என்பது அவரை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, நம்மிடையே சிலர் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். அவர்கள் பாம்பு, தேள் போன்றவர்களை விட அதிக ஆபத்தை விளைவிப்பவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்களால் ஒருவரின் வாழ்க்கையே சீரழிந்துவிடும். மனதை விஷமாக்கும் அத்தகைய கெட்டவர்களிடம் இருந்து தொலைவில் இருக்க வேண்டும் என்பதே சாணக்கியரின் அறிவுரை. அத்தகை தீய மனம் கொண்டவர்களிடம் ஒருபோதும் உதவி கேட்கக்கூடாது. ...