இந்தியா, மே 7 -- நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்கள் திருப்பி கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தற்போது குரு பகவானின் தாசியான மீன ராசியில் நுழைந்திருக்கின்றார்.

சனி பகவான் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் வக்கிர நிலையடைந்துள்ளார். இது அனைத்து ராசிக...