இந்தியா, மே 31 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி அல்லது நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியில் இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரம் செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது இவர...