இந்தியா, மே 25 -- ஜோதிடத்தில், சனி பகவான் ஒருவரின் கர்மாவை அப்படியே முழுவதுமாக கொடுப்பவராக கருதப்படுகிறார். சனி பகவான் ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மாவுக்கேற்ப பலன் தருவதால் அவரை கண்டு அனைவரும் பீதி அடைகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சனி ஜெயந்தி என்றால் சனி பகவான் பிறந்த நாள் என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் மக்கள் சனி பகவானை மனதார வணங்கினால் அவரின் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு, சனி ஜெயந்தி 2025 மே 27, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக சனி ஜெயந்தி இந்து மதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில பரிகாரங்கள் செய்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: எதிர்பா...