இந்தியா, மே 28 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் இவர் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகின்றார். அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் பகவான் விளங்கி வருகின்றார். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.

சனி மற்றும் சூரியன் இருவரும் கடந்த மே 20ஆம் தேதி அன்று 90 டிகிரி அம்சத்தில் அமர்ந்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திரியோகதச யோகம் உருவ...