இந்தியா, ஏப்ரல் 30 -- நவக்கிரகங்களில் சனி பகவானின் பெயரை கேட்டாலே பலருக்கு பீதியுடன் காம்போ ஆஃபராக பதற்றமும் வந்து ஒட்டிக்கொள்ளும். குரு பெயர்ச்சியின் போது குஷியாக இருப்பவர்கள், சனிபகவான் பெயர்ச்சியின்போது மன உளைச்சலில் திரிவார்கள். சிலர் கவலையின் உச்சத்திற்கே சென்று "என்ன நடக்குமோ... ஏது நடக்குமோ.." என்று தவியாய் தவிப்பார்கள்.

சனி பகவானின் தசா நடப்பவர்களின் நிலைமையோ இதைவிட மோசம். இப்படியெல்லாம் விரக்தியில் புலம்பும் அளவிற்கு சனிபகவான் அவ்வளவு மோசமானவரோ, கொடூரமானவரோ அல்ல. இதற்கெல்லாம் சனி பகவான் பற்றி சிலர் ஏற்படுத்தி வைத்துள்ள மாயபிம்பம்தான் காரணம்.

"சனி பகவானிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை. மனித வாழ்க்கைக்கு தேவையில்லாத விஷயங்களை தான் தருவார். அவரிடம் நல்லதே கிடையாது" போன்ற பேச்சுகள் அதிகம். ஒரு பொய்யை திரும்ப திரும்ப ஆயிரம் தடவை சொன்...