இந்தியா, மே 19 -- தவெக தனது அடுத்த பூத் கமிட்டி மாநாட்டை வடக்கு மண்டலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக கடலூர் மற்றும் வேலூர் பகுதிகளில் மாநாட்டிற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டலத்தில் ஏற்கனவே முதல் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இந்த மாநாடு கட்சியின் அமைப்பு வலுவை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:- தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து கட்டமைப்பு வைத்திருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக என்ற இருகட்சிகளை போன்றே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தவெக சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் இலக்காக உள்ளது. தமிழகத்தை ஐந...