இந்தியா, மே 25 -- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் இன்று மாலை 04:05 மணி நிலவரப்படி கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:- "தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது" வானிலை மைய இயக்குநர் அமுதா அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை முதல் இரவு வரை ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்...