இந்தியா, மே 17 -- நமது இந்தியாவில் பெண் தெய்வங்களுக்கென கோயில்கள் பல இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டை திரும்பும் இடமெல்லாம் பெண் தெய்வங்களுக்கான கோயில்கள் அதிகம் காணப்படுகின்றது. அனைத்து மக்களும் படையெடுத்துச் செல்லக்கூடிய எத்தனையோ சிறப்பு மிகுந்த திருக்கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில்.

சிவபெருமான் கோயில்களில் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மட்டும்தான் மூலவர் மற்றும் உற்சவர் ஒன்றாக இருப்பார்கள். அதற்குப் பிறகு அம்பிகை திருக்கோயில்களில் மூலஸ்தானத்தில் இருக்கக்கூடிய அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில்தான். இந்த கோயிலின் காவல் தெய்வமாக கருப்பண்ணசாமி திகழ்...