இந்தியா, மே 21 -- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த மாதங்களில் குழந்தைகளை ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டியதாக்கி உள்ளது. அதிலும் இன்றைய தலைமுறையினர் ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று விட வேண்டும் என நினைக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு சுற்றுலா என்று கூறியதும் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இரு இடங்கள் தான்.

இங்கு தான் வெயிலின் தாக்கம் குறைவாகவும், குளுமையான வானிலை நிலவுவதால் இந்த இடங்கள் பிரசித்தி பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் இன்று அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடை விட...