இந்தியா, ஏப்ரல் 30 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இதனால் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் வருகின்ற மே 18ஆம் தேதி மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கின்றார். அதேசமயம் இந்த மே மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சொல்கின்றார். குரு மற்றும் ராகுவின் அம்சத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்ச ராஜயோகம் உருவாக உள்ளது.

குரு ராகு உருவாக்கும் நவபஞ்ச யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறப்போவதாக கூறப்படுகிறது...