இந்தியா, மே 28 -- கொசுக்கள் தான் தற்காலத்தில் உள்ள பெரிய பிரச்சனையாகும். இந்த கொசுக்களினால் பல விதமான நோய்கள் பரவுகின்றன. அரசு சார்பில் கொசுக்களை ஒழிக்க புகை போன்ற நடவடிக்கைகள் எடுத்தாலும் கொசுக்களை முழுமையாக அழிக்க முடியவில்லை. அதற்கு காரணம் கொசுக்களின் உற்பத்தி தேங்கி இருக்க கூடிய குறைந்த அளவிலான நீரில் கூட நடந்து விடும். எனவே கொசுக்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம். கொசுக்கடியால் தான் டெங்கு, மலேரியா, யானைக்கல் நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. பல பேர் உள்ள இடத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் அடிக்கடி கொசு கடிப்பதாக கூறுவார்கள். அதற்கு அவர்களின் இரத்த வகை தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது குறித்து ஆய்வு ஒன்று தெளிவுப்படுத்தியுள்ளது. முழுமையான விவரங்களை இங்கே காண்போம்.

மழைக்காலம் முடிவடையும் போது கொசுத் த...