இந்தியா, மே 23 -- "கடவுளின் சொந்த நாடு' என பெருமை போற்றப்படும் கேரள மாநிலம் பலவிதமான விஷயங்களுக்கு பிரபலம் ஆகும். அங்கு உள்ள மலைகள், இயற்கை எழில் பொங்கும் காட்சிகள் என சொல்லிக் கொண்டே போகலாம். கேரளாவின் பெருமைகளில் ஒன்றாக அங்குள்ள உணவுகள் உள்ளன. இங்கு மீன், பீஃப், சிக்கன் என அசைவ உணவுகளும் அசத்தலான சுவையில் செய்யபட்டு சாப்பிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கும் கேரள உணவுகள் என்றால் அலாதி பிரியம் ஆகும். கேரள உணவு என்று கூறியவுடன் நமக்கு நினைவுக்கு வருவது புட்டு தான்.

பெரும்பாலான மலையாளிகளின் காலை நேர உணவு தான் இந்த புட்டு, இதற்கு இணை உணவாக கடலை கறி வைத்து சாப்பிடுவார்கள் என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் புட்டினை பல்வேறு பாரம்பரிய முறைகளில் சாப்பிடுகின்றனர். இங்கு அந்த முறைகளை காணலாம்.

மேலும் படிக்க | பப்பட சம்மந்தி : ...