இந்தியா, மே 24 -- கர்நாடாகவில் குளிர் காலம் முடிந்து, வசந்த காலத்தின் வருகையைக் கொண்டாட வசந்த பஞ்சமி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அன்னை சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சரஸ்வதி கற்றல் மற்றும் ஞானத்தின் கடவுள் ஆவார். இந்த நாளில் இந்த கேசரி பாத் தயாரிக்கப்படுகிறது. இதை தயாரிக்க அரிசி, நெய், குங்குமப்பூ, சர்க்கரை மற்றும் உலர்ந்த பழங்கள் தேவை. இவற்றை பயன்படுத்தி செய்யும்போது, வாசம் உங்கள் மூக்கை துளைக்கும். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பாஸ்மதி அரிசி - ஒரு கப்

* டெசிகேடட் கோகனட் - அரை கப் (உலரவைக்கப்பட்ட தேங்காய், கடைகளில் டெசிகேடட் கோகனட் என்று கேட்டு வாங்கிக்கொள்ளவேண்டும்)

* சர்க்கரை - முக்கால் கப்

* முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

* பாதாம் - ஒரு டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

* ஏலக்காய்ப் பொடி - கால...