கரூர்,சேலம், மே 1 -- மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் வீட்டிற்குச் சென்று அதிமுக சார்பில், ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, அதிமுக ஐடி விங்க் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேலும் படிக்க | கொல்கத்தா தீ விபத்து: 3 தமிழர்கள் உள்ளிட்ட 14 பேர் பலி.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

''அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கொல்கத்தாவில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மழலைகள் தியா, ரிதன் ஆகியோர் குடும்பத்தினரின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவரின் கு...