இந்தியா, ஏப்ரல் 14 -- உங்கள் டீன்ஏஜ் மகனை நீங்கள் அன்புடனும், அறிவுடனும் வளர்க்கவேண்டும். டீன் ஏஜ் என்பது குழப்பங்கள் நிறைந்த ஒரு பருவமாகும். சவால் நிறைந்த பருவமும் ஆகும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இது சவாலான நாட்கள்தான். ஒரு தாயின் வார்த்தைகள் அவர்களின் மகன்களுக்கு, வழிகாட்டவேண்டும். சவுகர்யமாக இருக்கவேண்டும். அவர்களை முன்னேற்ற வேண்டும். ஒரு தாயிடம் இருந்த டீன்ஏஜ் மகன்கள் கேட்க விரும்புவது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களின் உணர்வுகளை உணரும்போதுதான் உண்மையான பலம் உங்களுக்கு கிடைக்கிறது. அவற்றை நீங்கள் மறைக்கும்போது அது கிடைப்பதில்லை. நீங்கள் அழலாம், காயப்படலாம், பாதிக்கப்படலாம். உங்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். அவை மிகவும் முக்கியமானவை.

நீ வளர்கிறாய், கூடவே கற்றுக்கொள்கிறாய், தவறுகள் உன்னை வரையறுக்காது. அவை உன்னை ...