இந்தியா, ஏப்ரல் 1 -- உங்கள் குழந்தைகள் தாங்கள் நினைத்ததை அடையவேண்டும் என்றால் அழுது அடம்பிடிப்பார்கள். உங்கள் குழந்தைகள் நீங்கள் எதையாவது மறுக்கும்போது அடிக்கடி அழுது அடம்பிடித்தால், அவர்கள் உங்களை மாற்றப் பார்க்கிறார்கள் என்று பொருள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே அவர்களுக்கு அந்த பொருள் வேண்டாம் என்றால், அதை கொடுக்காமல் இருந்தால், அடம்பிடிப்பது வேலைக்கு ஆகாது என்று புரிந்துகொள்கிறார்கள். எனவே அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் அது தொடராமல் இருக்கவேண்டும்.

உங்கள் குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற வேலையை அவர்கள் செய்துகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் உங்களை அதிகம் சார்ந்திருக்கிறார்கள் என்று பொருள். அவர்களே தங்களின் உடைகளை மாற்றிக்கொள்ளவேண்டும். சிறிய பொறுப்புக்களை அவர்களே ஏற்க வேண்டும். தன்னுடைய பொருட்களை சரியான அடுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். ...