இந்தியா, மே 12 -- கலாமின் வார்த்தைகள், ஞானத்தின் திறவுகோலாகும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஒரு அறிவார்ந்த அறிவியல் அறிஞர் மட்டும் கிடையாது. அவருக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது. இவர் இளந்தலைமுறையினரின் சக்தியை அறிந்து வைத்திருந்தார். இவரின் வார்த்தைகள் குழந்தைகளை, மாணவர்களை எப்போதும் ஈர்பவையாகும். இவரின் கனவு காணுங்கள் என்ற வாசகம் பிரபலமானதும் ஆகும். மேலும் கடின உழைப்பு மற்றும் அடக்கமாக நடந்துகொள்வது என அனைத்தும் குழந்தைகளுக்கு தேவையானவை. இவை தவிர அப்துல் கலாம் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள்.

வானத்தைப் பாருங்கள் நாம் தனியாக இல்லை என்ற இவரின் வாசகம், இந்த உலகம் முழுவதும் நமது நண்பர்கள் என்பதைக் குறிக்கிறது. நாம் எப்போதும் சிறப்பானதை மட்டுமே இந்த உலகுக்கு கொடுக்கவேண்டும் என்பதை அது குறிக்கிறது. இது குழந்தைகளை அவர்களை சுற்றியுள்...