இந்தியா, மே 7 -- கடந்த 2022ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் காந்தாரா. பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்ட இந்தத்திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் முதல் பாகம் தற்போது தயாராகி வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் கபில் என்பவர் இறந்து இருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது.

துணை நடிகரான இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் நேற்றைய தினம் அங்குள்ள கொல்லூர் சௌபர்ணிகா ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கிறார். மதிய உணவுக்கு பிறகு ஆற்றில் கபில் குளிக்கச் சென்றதாகவும், நீர் வரத்து அதிகரித்த காரணத்தால் அவர் அதில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Kantara Chapter 1: காந்தாரா சாப்டர் 1 தள்ளிப்போகிறதா?.. 'சந்தேகமே வேண்டாம்.. அக்டோப...