இந்தியா, மே 9 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். நவக்கிரகங்கள் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். தற்போது இவர் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி அன்று குரு பகவான் மற்றும் புதன் பகவான் இருவரும் 60 டிகிரி அம்சத்தில் அமர்ந்தனர். இவர்களின் சுப பார்வை சக்தி வாய்ந்த லாப திருஷ்டி...