இந்தியா, பிப்ரவரி 21 -- Lord Guru: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாத முதல் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த 2025 ஆம் ஆண்டு மீண்டும் குரு பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார்.

அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் க...