இந்தியா, ஜூன் 7 -- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

கடந்த மே மாதம் பதினோராம் தேதியன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு சென்றார். திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு சென்றார்.

குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பண யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுக...