இந்தியா, மே 14 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்கள் தங்கள் இடம் மாறும்போது ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.

நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற மே 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் குரு பகவான் நுழைகின்றார்.

அதன் பின்னர் மே 29ஆம் தேதி இன்று சந்திர பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். இதன் காரணமாக குரு மற்றும் சந்திரன் மிதுன ராசியில் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்க...