இந்தியா, ஜூன் 3 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை மாற்றத்தை செய்வார்கள். அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மே மாதம் 11-ம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி, மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு சென்றார். குரு பகவானின் பார்வை துலாம், தனுசு, கும்பம் உள்ளிட்ட ராசிகளின் ...