இந்தியா, ஏப்ரல் 24 -- நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். குரு பகவானின் அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் மாதம் நான்காம் தேதி என்று குரு பகவான் தனது வக்ர பயணத்தை மேற்கொள்ள உள்ளார். குரு பகவானின் இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கு...