இந்தியா, ஏப்ரல் 15 -- நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்திற்கும் காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவருடைய ராசிமாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் சூரிய பகவானின் நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது அன...