இந்தியா, ஜூன் 7 -- குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் - வரமா? சாபமா? - தரவுகள், கள உண்மைகள் சாபமே என உறுதிபடுத்தினாலும், தமிழக அரசு பொதுமக்கள், வார்டு கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை - Waste To Energy (WTE) அமல்படுத்த இருப்பது, ஏற்கனவே உள்ள சுகாதார பாதிப்பை மேலும் மோசமாக்கும் என்பதால் அத்திட்டத்தை கைவிட வேண்டும்.

குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் வெளித்தோற்றத்திற்கு கவர்ச்சிகரமாகத் தெரிந்தாலும், உண்மையில் சூழல் சீர்கேட்டை அதிகமாக்கி, மக்களுக்கு நோய் பாதிப்பை அதிகப்படுத்துவதே கள உண்மை என்பதால் கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

ஏப்ரல் 2025ம் தேதி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய...