இந்தியா, ஜூன் 10 -- கீழடி அகழாய்வு தொடர்பான அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் குறித்த பேச்சுக்கு வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து உள்ளார்.

சென்னை வந்து உள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கீழடி அகழாய்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடுவது தாமதமாவதற்குக் காரணம் இன்னும் சில தரவுகள் தேவைப்படுவதால்தான். இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

அவர் கூறியதாவது, கீழடி குறித்து பேசப்படும் அறிக்கைகள் "அறிவியல் பூர்வமானவை அல்ல" என்றும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் "ஆதரிக்கப்பட்டவை மற்றும் நிறுவப்பட்டவை அல்ல" என்றும், அவற்றை அங்கீகரிப்பதற்கு அல்லது அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு "மே...