இந்தியா, மே 11 -- பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நான்கு நாட்கள் கடுமையான விரோத போக்குக்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்த புரிதலை ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டினார். இந்த தாக்குதல்கள் மில்லியன் கணக்கான மக்களின் மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறினார்.

பிரிந்து வாழும் இரண்டு அண்டை நாடுகளுடன் அதிக வர்த்தகத்தில் ஈடுபடுவேன் என்றும், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: 48 மணி நேர பேச்சுவார்த்தை..மத்தியஸ்தம் செய்த அமெரிக்க.. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி?

சனிக்கிழமை மாலை டொனால்ட் டிரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில், அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவு...