இந்தியா, மே 31 -- காற்றாலை மின்சக்தியை மின்வினியோக அமைப்பில் உள்வாங்காமல், அதன் அளவை தமிழக மின்வாரியம் கணிசமாகக் குறைத்ததால், நாளொன்றுக்கு, 8-10 மில்லியன் யூனிட் மின்சாரம் வீணானது.

புவிவெப்பமடைதல் பாதிப்பு தமிழகத்தில் தினமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

2025ல் தென்மேற்கு பருவமழை ஏறக்குறைய 5 நாட்கள் முன்னரே தொடங்கியதற்கு புவிவெப்பமடைதலும் ஒரு முக்கிய காரணம் என்பது ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் முன்கூட்டிய, வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையின் காரணமாக மல்லிகைப்பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு புவிவெப்பமடைதலும் முக்கிய காரணம். நாள் ஒன்றுக்கு 25 டன் மல்லிகை உற்பத்தியாவது, ஒரு டன்னாக குறைந்துள்ளது.

எனில், புவிவெப்பமடைதல் பாதிப்பைக் குறைக்க, மத்திய/மாநில அரசுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (காற்றாலை மின்சாரம்)...