இந்தியா, ஜூன் 11 -- கார்த்தியை கொல்ல நடக்கும் சதி.. திடீர் என்ட்ரி கொடுக்கும் தீபாவின் அம்மா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி சிவகாமி நினைவுக்கு நாளுக்கு பூஜை செய்ய ஏற்பாடுகளை செய்ய சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரேவதி கை வலியில் தவிக்க கார்த்திக் பேண்டேஜை கழட்டி விட்டு கைகளை ரிலாக்ஸ் செய்ய சொல்கிறான். இதையடுத்து தீபாவின் அம்மா ஜானகி கார்த்தியை நான்கு பேர் கத்தியால் குத்த வருவது போல் கனவு கண்டு அலறி எழுகிறாள். மைதிலி என்னாச்சு என்று கேட்க, ஜானகி நடந்ததை சொல்கிறாள்....