இந்தியா, ஜூன் 11 -- பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே புலாவ் உணவு இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது. இந்த புலாவ் உணவில் இருந்தே பிரியாணி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் புலாவ் காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் சாப்பிடலாம். இதன் காரணமாக புலாவை செய்வது எல்லா நேரங்களுக்கும் உகந்த உணவாக இருக்கும். மேலும் இந்த புலாவில் பல வித வகைகள் உள்ளன. பல காய்கறிகளை முதன்மையாக கொண்டு புலாவ் செய்யப்படுகிறது. இப்பது காலிஃப்ளவர் வைத்து புலாவ் செய்யும் எளிமையான முறையை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | ஆந்திரா ஸ்பெஷல் லஞ்ச் காம்போ வேண்டுமா? இதோ சிம்பிள் புலாவ் மற்றும் முட்டை கிரேவி! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!

ஒரு கப் பாசுமதி அரிசி

ஒரு காலிஃப்ளவர்

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

3 பச்சை மிளகாய்

5 பல் பூண்டு

சிறிதளவு இஞ்சி

1 டிஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் ...